Monday, August 22, 2016

Mathru Shodasi- The slokas used to offer 16 PIndams to mother in Gaya

Mathru Shodasi-  The slokas  used to offer  16 PIndams  to mother  in Gaya

Translated by
P.R.Ramachander



All Hindus believe that by offering Pindas(balls made of food) to the departed souls , they get comfort and later solace . Gaya in Bihar is considered extremely special for offering PIndas to the ancestors. A person without both parents offers 64 pindas , out of them 16 are specially reserved for the mother. These are offered by chanting sixteen Manthras called Mathru Shodasi. I am giving below my translation in English.  Below it you will  see
1.Extract from Brahmasri Sarma Sastrigal’s   book which contains  the slokas in Tamil with meaning
2.Extract from a web site  giving it in Sanskrit
3.Extract of Srikalabhairava’s  post in face book

1.Garbhadavagaane  dukham    , vishame  bhoomi varthmani ,
THasya   nishkramanarthaya, Mathru pindam  dadamyaham

1.Carrying me in the womb during pregnancy.
You bore  the sorrow  caused due to difficulty  of walking on earth
And for  getting rid  of that sin  earned by me  due to that,
I am offering   to you , the offering (rice ball)   meant to the mother

2.Maasi maasi  krutham kashtam , vedanaa  prasave  thadhaa,
THasya   nishkramanarthaya, Mathru pindam  dadamyaham

2.I had given you   troubles  from month to month ,
And   your pregnancy    was a painful   affair,
And for getting rid  of the sin earned by me  due to that,
I am offering   to you , the offering (rice ball)   meant to the mother

3.Padhbhyaam  prajaayathe   puthro  , jananyaa  parivedanam,
THasya   nishkramanarthaya, Mathru pindam  dadamyaham

3.AS a son  I gave you great pain kicking  by my leg,
So that  you could attain the status  of mother,
And for getting rid  of the sin earned by me  due to that,
I am offering   to you , the offering (rice ball)   meant to the mother

4.SAmpoorne Dasame maasi cha athyantham  Mathru peedanam,
THasya   nishkramanarthaya, Mathru pindam  dadamyaham

4.Till  the ten  months  of pregnancy   was complete  ,
I gave you  lots and lots of pain,
And for getting rid  of the sin earned by me  due to that,
I am offering   to you , the offering (rice ball)   meant to the mother

5.Chaithilye  prasave  prapthe  , matha  vinthathi  dushkrutham,
THasya   nishkramanarthaya, Mathru pindam  dadamyaham

5 During  the pregnancy   and   when it neared  the delivery  ,
Oh mother ,  you entered very great suffering,
And for getting rid  of the sin earned by me  due to that,
I am offering   to you , the offering (rice ball)   meant to the mother

6.Pibescha kadu dravyaani  , kwaathaani  vividhaani cha ,
THasya   nishkramanarthaya, Mathru pindam  dadamyaham

6.You had   to suffer due  to  drinking several very  bitter liquids ,
And several types   of Kashayas to  keep me healthy
And for getting rid  of the sin earned by me  due to that,
I am offering   to you , the offering (rice ball)   meant to the mother

7.Agninaa   soshayath deham , dari rathro poshanena  ,
THasya   nishkramanarthaya, Mathru pindam  dadamyaham

7.Your body  got  thin, because of your sufferings  of  the fire of hunger,
After  delivery   though    you  nurtured  me , day and night,
And for getting rid  of the sin earned by me  due to that,
I am offering   to you , the offering (rice ball)   meant to the mother

8.Rathrou  moothra  pureshaabhyaam   klinnasyaan   mathru  karpada,
THasya   nishkramanarthaya, Mathru pindam  dadamyaham

8.During nights  due  to urine and stools  passed by me .
The mother  suffered due  to wet and very smelly cloths,
And for getting rid  of the sin earned by me  due to that,
I am offering   to you , the offering (rice ball)   meant to the mother

9.Kshithyaa  vihwale  puthre mathaa hyam tham prayachathi,
THasya   nishkramanarthaya, Mathru pindam  dadamyaham

9.She suffered a lot    without food  and gave me,
Food and water so that I do not feel thirsty or hungry
And for getting rid  of the sin earned by me  due to that,
I am offering   to you , the offering (rice ball)   meant to the mother

10.Dhiva rathrou sadaa mathaa  dadadthi nirbharam sthanam,
THasya   nishkramanarthaya, Mathru pindam  dadamyaham

10  Day and night  without any    interval  oh mother,I gave you pain,
When you   offered  me your well  filled up breasts,
And for getting rid  of the sin earned by me  due to that,
I am offering   to you , the offering (rice ball)   meant to the mother

11.Maaghe  maasi  nithake   sisire athyantha   dukithaa,
THasya   nishkramanarthaya, Mathru pindam  dadamyaham

11.You used  to suffer  a lot  in the winter  and summer months
For the sake   of  protecting me and making me comfortable,
And for getting rid  of the sin earned by me  due to that,
I am offering   to you , the offering (rice ball)   meant to the mother


12.Puthre Vyadhi samayukthe, mathaa haakrantha  Kasrini,
THasya   nishkramanarthaya, Mathru pindam  dadamyaham

12.When as   a son I  used to get sick,
Oh mother  you would get  greatly agitated and suffer,
And for getting rid  of the sin earned by me  due to that,
I am offering   to you , the offering (rice ball)   meant to the mother

13.Yamadware   mahaa gore  Mathaa   soshathi   santhatham,
THasya   nishkramanarthaya, Mathru pindam  dadamyaham

13.Oh mother , you  are crossing  several  horrors on the way  to Gate of Yama
And   for  her to cross  all those   terrors,
And for giving help  during those  troublesome times,
I am offering   to you , the offering (rice ball)   meant to the mother

14 Yaavath puthro na bhavathi thavan  mathuscha  soshanam,
 THasya   nishkramanarthaya, Mathru pindam  dadamyaham

14. There  are  no  sons like who  troubled
    Their mothers  like me
    And  just like   all those  good sons ,
   I am offering   to you , the rice ball  meant to the mother

15.Svalpa aaharasya   karanee  yaavath  puthrascha  balaka,
THasya   nishkramanarthaya, Mathru pindam  dadamyaham

15  You were   eating   very less  food and suffering
For the sake  of feeding your son  so well,
And for getting rid  of the sin earned by me  due to that,
I am offering   to you , the offering (rice ball)   meant to the mother


16.Gathra  Bangaa bhaven mathaa , n mruthyu  eva  na samsaya,
THasya   nishkramanarthaya, Mathru pindam  dadamyaham

16,  Even when I was  in her womb and when I was a baby,
I was giving my mother  death  like troubles,
And for getting rid  of the sin earned by me  due to that,
I am offering   to you , the offering (rice ball)   meant to the mother


Mahaa bhoothan antharangastho,
Mahaa  mayaa  mayasthasthaa,
SArva bhoothathmaka   chaiva  ,
Thasmai  sarvathmane  nama.

I salute   him who is  the universal soul,
Who  exists  inside  all beings  ,
Who  pervades  as illusion everywhere,
And who  is the soul of all beins



1.The extract   from வேதமும் பண்பாடும்  a book by Brahmasri  Sarma Satrigal , where the slokas  and meanings   are given in Tamil (Taken from URl 

- மாத்ரு ஷோடஸி ஸ்லோகமும் அர்த்தமும் ;("வேதமும் பண்பாடும்" புத்தகத்தில் இருந்து..} :


மாத்ரு ஷோடஸி ஸ்லோகமும் அர்த்தமும்:

அக்ஷய வடம் என்பது ஒரு பிரமாண்டமான வ்ருக்ஷம். ஆல
மரமாகும். இதன் நிழலில் நாம் பிண்ட பிரதானம் செய்கின்றோம்.
மிகவும் விசேஷம். 64 பிண்டங்களில் அம்மாவிற்கு மட்டும்16
பிண்டங்களை வைக்கிறோம். இதற்குமாத்ரு ஷோடஸி
என்றும் கூறுவர்.

இந்த 16 ஸ்லோகங்களைச் சொல்லி தனது தாயாருக்கு 16
பிண்ட பிரதானம் செய்ய வேண்டும். அந்த ஸ்லோகங்களையும்,
அதன் அர்த்தங்களையும் இப்போது இங்கு பார்ப்போம்.
(நன்றி : கீதா ப்ரஸ்)

1. கர்பஸ்ய உத்கமநே துகம் விஷமே பூமி வர்த்மநி |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

என்னைக் கர்ப்பத்தில் தாங்கிய படி, மேடு பள்ளங்களில்
ஏறி இறங்கும்போது என் தாய் வேதனைகளை அனுபவித் தாளே, அதனால் எனக்கு விளைந்த பாவத்திற்குப் பரிகாரமாக இந்தப்
பிண்டத்தைத் தருகின்றேன்.

2. மாஸி மாஸி க்ருதம் கஷ்டம் வேதநா ப்ரஸவே ததா |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

ஒவ்வொரு மாதத்திலும், பிரசவத்தின் போதும் என் தாய்க்கு
என்னால் ஏற்பட்ட வேதனைகளை உண்டாக்கிய பாவத்திற்குப்
பரிகாரமாக இப்பிண்டத்தைத் தருகிறேன்.

3. பத்ப்யாம் ப்ரஜாயதே புத்ரோ ஜநந்யா: பரிவேதநம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

என் தாயின் வயிற்றில் நான் கால்களால் உதைத்து உண்டாக்கிய வேதனை எனக்குச் சேர்த்த பாவமூட்டைக்குப் பரிகாரமாக இந்தப்
பிண்டத்தைத் தருகின்றேன்.

4. ஸம்பூர்ணே தசமே மாஸி சாத்யந்தம் மாத்ருபீடநம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

நிறை கர்ப்பிணியாக என் தாய் என்னைச் சுமந்தபோது அவளுக்கு
உண்டான வேதனைகள் எனக்குச் சேர்த்த பாவத்தைப் போக்க
இப்பிண்டத்தைத் தருகின்றேன்.

5. சைதில்யே ப்ரஸவே ப்ராப்தே மாத விந்ததி துஷ்க்ருதம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

தாயின் கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட களைப்பு, மூர்ச்சை
போன்றவற்றால் வந்த வேதனைகள் எனக்கு விளைவித்த
பாவத்தைப் போக்க, பரிகாரமாக இப்பிண்டத்தைத் தருகிறேன்.

6. பிபேச்ச கடுத்ரவ்யாணி க்வாதாநி விவிதா நிச|
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

என்னை வியாதிகள் தாக்காமல் இருக்க, கசப்பான மருந்துகளைச்
சாப்பிட்டாளே என் தாய் அவளுக்கு நான் செய்த இந்தக் கொடுமைகளினால் எனக்கு உண்டான பாவத்தைப் போக்க,
பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகின்றேன்.

7. அக்நிநா சோஷயேத்தேஹம் தரிராத்ரோ போஷணேந |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

நான் பிறந்த போது மூன்று நாட்கள் அன்ன & ஆகாரமின்றி
ஜடராக்னியின் (பசி என்னும் பெரு நெருப்பு) வெம்மையில்
என் தாய் நொந்தாளே, அவளுக்கு என்னால் ஏற்பட்ட இந்த
கொடுமை எனக்கு விளைவித்த பாவத்திற்குப் பரிகாரமாக
இந்தப் பிண்டத்தைத் தருகின்றேன்.

8. ராத்ரௌ மூத்ரபுரீஷாப்யாம் க்லிந்ந: ஸ்யாந்மாத்ரு கர்பட |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

இரவில் நான் என் தாயின் ஆடைகளை, மல
மூத்திரத்தால் அசுத்தம் செய்த பாவத்திற்குப்
பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகிறேன்.

9. க்ஷ§தயா விஹ்வலே புத்ரே மாதா ஹ்யந்தம் ப்ரயச்ச தி |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

எனது பசி, தாகம் தீர்க்க (தனக்கு இல்லையென்றாலும்)
அவ்வப்போது உணவும் நீரும் எனக்குத் தந்தாளே என் தாய்,
அவளை வருத்திய பாவத்தை நீக்கப் பரிகாரமாக
இப்பிண்டத்தைத் தருகிறேன்.

10. திவாராத்ரௌ ஸதா மாதா ததாதி நிர்பரம் ஸ்தநம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

அல்லும் பகலும் என் தாயின் முலைப் பால் அருந்தும்
போது அவளை நான் துன்புறுத்தினேனே, அதனால் விளைந்த
பாவத்திற்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகிறேன்.

11. மாகே மாஸி நிதாகே சசிரேத்யந்த து கிதா |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

மாக மாதத்தில் சிசிர ருதுவில் கோடையில் என்னைக் காக்கத்
தன் உடலை வருத்திக் கொண்டாளே என் தாய், அவளுக்கு
நான் தந்த இந்தத் துன்பங்களால் விளைந்த பாபங்களைப்
போக்கிக் கொள்ளப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத்
தருகின்றேன்.

12. புத்ரே வ்யாதி ஸமாயுக்தே மாதா ஹா க்ரந்த காரிணி |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

மகன் நோய்வாய்ப்பட்டானே என்று கவலையால் வாடி
இருந்தாளே என் தாய், அவளுக்கு விளைவித்தஅந்த மனத்
துயருக்குப் பரிகாரமாக இந்தப் பிண்டத்தைத் தருகின்றேன்.

13. யமத்வாரே மஹாகோரே மாதா சோசதி ஸந்ததம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

யமலோகம் செல்லும் என் தாய் கோரமானவற்றையெல்லாம்
கடந்து செல்வதற்குத் துணை நிற்பதற்காக இந்தப் பிண்டத்தைத்
தருகின்றேன்.

14. யாவத்புத்ரோ பவதி தாவந்மாதுச்ச சோசநம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

என் தாய்க்கு நான் தந்த வேதனைகளுக்குப் பரிகாரமாக,
அறிவுசால் புத்திரர்கள் அவர்களது தாய்க்குச் செய்வதை
ஒப்ப, நானும் இப்பிண்டத்தைத் தருகின்றேன்.

15. ஸ்வல்ப ஆஹாரஸ்ய கரணீ யாவத் புத்ரச்ச பாலக: |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

நான் நன்கு வளர்வதற்காக, தனக்கு ஆகாரம் இல்லாமல் கூட
கஷ்டப்பட்டாளே அந்தத் தாய்க்குத் நான் தந்த வேதனைகளுக்குப்
பரிகாரமாக இப்பிண்டத்தைத் தருகிறேன்.

16. காத்ரபங்கா பவேந்மாதா ம்ருத்யு ஏவ ஸம்சய |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

கர்ப்பத்திலும், சிசுவாக இருந்த போதும் மரண வேதனையை
ஒத்த பல கஷ்டங்களை நான் என் தாய்க்குத் தந்தமைக்குப்
பரிகாரமாக இந்த பிண்டத்தைத் தருகின்றேன்.

**இந்த ஸ்லோகங்களை படித்து முன்பே பரிச்சயம் செய்து கொள்வதும், அவற்றின் பொருளை அறிந்து கொள்வதும்,
கர்த்தா மனம் ஒன்றித் தன் கடமையை ஆற்ற உதவும்.

अथ मातृषोडशी।



गर्भादवगमे चैव विषमे भूमिवर्त्मनि।
तस्या निष्क्रमणार्थाय मातृपिण्डं ददाम्यहम्॥
मासि मासि कृतं कष्टं वेदना प्रसवेषु च।
तस्या निष्क्रमणार्थाय मातृपिण्डं ददाम्यहम्॥
श्ौथिल्ये प्रसवे चैव मातुरत्यन्तदुष्करम्।
तस्या निष्क्रमणार्थाय मातृपिण्डं ददाम्यहम्॥
पद्भ्यां जनयते मातुर्दुःखञ्चैव सुदुस्तरम्।
तस्या निष्क्रमणार्थाय मातृपिण्डं ददाम्यहम्॥
पद्भ्यामित्यत्र दद्भ्यामिति पाठः॥४॥
अगि्नना शोषते देहं त्रिरात्रानशनेषु च।
तस्या निष्क्रमणार्थाय मातृपिण्डं ददाम्यहम्॥
पिबेच्च कटुद्रव्याणि क्लेशानि विविधानि च।
तस्या निष्क्रमणार्थाय मातृपिण्डं ददाम्यहम्॥
दुर्ल्लभं भक्षद्रव्यस्य त्यागे विन्दति यत् फलम्।
तस्या निष्क्रमणार्थाय मातृपिण्डं ददाम्यहम्॥
रात्रौ मूत्रपुरीषाभ्यां भिद्यते मातृकर्पटम्॥
तस्या निष्क्रमणार्थाय मातृपिण्डं ददाम्यहम्॥
पुत्त्रं व्याधिसमायुक्तं मातृदुःखमहर्निशम्।
तस्या निष्क्रमणार्थाय मातृपिण्डं ददाम्यहम्॥
यदा पुत्त्रो लभते तदा मातुश्च शोचनम्।
तस्या निष्क्रमणार्थाय मातृपिण्डं ददाम्यहम्॥
क्षुधया विह्वले पुत्त्र्ो ददाति निर्भरं स्तनम्।
तस्या निष्क्रमणार्थाय मातृपिण्डं ददाम्यहम्॥
दिवा रात्रौ यदा मातुः शोषणञ्च पुनः पुनः।
तस्या निष्क्रमणार्थाय मातृपिण्डं ददाम्यहम्॥
पूर्णे तु दशमे मासि मातुरत्यन्तदुष्करम्।
तस्या निष्क्रमणार्थाय मातृपिण्डं ददाम्यहम्॥
गात्रभङ्गो भवेन्मातुस्तृप्तिं नैव प्रयच्छति।
तस्या निष्क्रमणार्थाय मातृपिण्डं ददाम्यहम्॥
अल्पाहारवती माता यावत् पुत्त्रोऽस्ति बालकः।
तस्या निष्क्रमणार्थाय मातृपिण्डं ददाम्यहम्॥
यमद्वारे महाघोरे पथि मातुश्च शोचनम्।
तस्या निष्क्रमणार्थाय मातृपिण्डं ददाम्यहम्॥
इति गयायां प्रसिद्धिः

3.From post of  Sree Kaalabhairavi

(This  has also been given as such without any changes  in http://knramesh.blogspot.in/2016/08/pindam-for-mother-at-gayaa-slokas-with.html  )

சிறிது நிதானமாகப் படியுங்களேன் .. உங்கள் கண்களில் கண்டிப்பாக ஒரு சொட்டு கண்ணீராவது வரும்.. உங்கள் தாயை நினைத்து..
கயா கயா கயா. என்று சொல்வது ஆதி சங்கரர் தனது தாயின் கடைசி காலத்தில் தான் வாக்கு கொடுத்தபடி அவளருகே வந்து அவள் மரணத்திற்கு பிறகு அவளது அந்திம கிரியைகளை செய்து இயற்றிய மனம் நெகிழும் மாத்ரு பஞ்சகம் 5 ஸ்லோகங்கள்
அனைவரும் இறந்த பின்பு தாய்க்கு பின்டம்
வைப்பார்கள் அதற்க்கு பரி பூரனமான அர்த்தம் தெரியுமா
விஷ்ணு பாதம்
பித்ரு ஸ்ரார்தம் கயாவில் செய்வது உசிதம் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. அக்ஷயவடத்தருகே பிண்ட பிரதானம் செய்வது ஒரு வழக்கம்.
''கயா கயா கயா. என்று சொல்வது நமது பித்ருக்களுக்கு ஸ்ரத்தையோடு அவர்களுக்கு திருப்தியளிக்கும் வகையில் நாம் செய்யும் கடமை சம்பந்தப்பட்டது. . ஒவ்வொரு ஹிந்துவும் வாழ்வில் ஒரு தடவையாவது செல்ல வேண்டிய இடம் கயா. குடும்பம் சகல சம்பத்துகளும் ச்ரேயஸும் பெறும்.
ஒரு 16 ஸ்லோகங்கள் கொண்டது மாத்ரு .ஷோடசி. தாய்க்கு மகன் அளிக்கும் 16 பிண்டங்கள் பற்றியது. அதன் அர்த்தம் புரிந்துகொண்டால் அவசியம் புரியும். தாயின் அருமை தெரியும்.
ஜீவதோர் வாக்ய கரணாத்
ப்ராத்யாப்தம் பூரி போஜணாத்
கயாயாம் பிண்ட தாணாத்
த்ரிபி: புத்ரஸ்ய புத்ராய
'' அடே பயலே, அம்மா அப்பா உயிரோடு இருக்கும்போதே அவர்கள் சொல்படி நட. அவர்களை சந்தோஷமாக வைத்துக்கொள். அவர்கள் ஆசீர்வாதம் தான் உன் படிப்பு மூலம் கிடைக்கும் சர்டிபிகேட்டை விட உன்னை நன்றாக வைக்கும். அவர்கள் காலம் முடிந்த பிறகு அந்தந்த திதியில் அவர்கள் பசியை போக்கு. அவர்களுக்கு தேவை அல்வா, ஜாங்கிரி,கீ ரோஸ்ட் அல்ல. வெறும் எள்ளும் தண்ணீரும் தான். முடிந்தால் ஒரு தடவை கயாவுக்கு குடும்பத்தோடு போ. அங்கு நீ அளிக்கும் பிண்ட ப்ரதானம் அவர்களுக்கு தேவை. ''புத்'' என்ற நரகத்திலிருந்து பெற்றோரை காப்பற்றுகிறவன் தான் 'புத்ரன்' என்று சாஸ்திரம் சொல்கிறது. நான் சொல்லவில்லை. .
அக்ஷய வடம், அக்ஷய வடம்என்று ஒரு வார்த்தை காதில் விழுகிறதே. அது என்ன? கயாவில் நாம் 64 ஸ்ரார்த்த பிண்டங்களை அங்கு தான் இடுகிறோம்.
ஸ்ராத்தம் பண்ணுபவர்கள் கயாவில் பித்ருக்களுக்கு, நமது முன்னோர்களுக்கு மட்டுமல்ல, தெரிந்தவர்கள் அறிந்தவர்களுக்கும் 'திருப்தியத', திருப்தியத' என்று மனமுவந்து அளித்து அவர்களை வேண்டுகிறோமே. அக்ஷய வடம் என்பது ஒரு மஹா பெரிய வ்ருக்ஷம். 'வடம்' (தமிழில் சின்ன '") ஆல மரம். சென்னைக்கருகே ல் திரு ஆலம் காடு (திருவாலங்காடு - வடாரண்யம் என்று பெயர் கொண்டது.)
இந்த அக்ஷய வடத்தின் கீழே நிழலில் தான் பிண்ட பிரதானம் இடுவார்கள். இதில் முக்யமாக 64 பிண்டங்களில் பெற்ற தாய்க்கு மட்டுமே 16 பிண்டங்கள். ஆந்த 16 பிண்டங்களை அம்மாவுக்காக ஒவ்வொரு வாக்யமாக சொல்லி இடுகிறோம். அந்த பதினாறு தான்மாத்ரு ஷோடஸி”.
1. கர்பஸ்ய உத்கமநே துகம் விஷமே பூமி வர்த்மநி |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
''கொஞ்சமா நஞ்சமா நான் உன்னை படுத்தியது. ஒரு பத்து மாத காலம் எப்படியெல்லாம் உன்னை உதைத்திருக்கிறேன். என்னையும் சுமந்தபடி மேடும் பள்ளமுமாக நீ அலைந்தாயே. நான் கொடுத்த கஷ்டத்தை துளி கூட நீ பொருட்படுத்த வில்லை. என்னை திட்டவில்லையே. சந்தோஷமாக என்னை உள்ளே அடக்கிய உன் வயிறை எண்ணற்ற முறை ஆசையாக தடவி கொடுத்தாயே. இதோ நான் செய்த பாவங்களுக்காக உனக்கு இந்த முதல் பிண்டம். பரிகாரமாக ஏற்றுக்கொள்வாயா?
2. மாஸி மாஸி க்ருதம் கஷ்டம் வேதநா ப்ரஸவே ததா |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
''ஏன் சோர்ந்து போயிருக்கிறாய். உன் பிள்ளை உள்ளே படுத்துகிறானா? பிரசவ காலம் கஷ்டமானது தான். மாசா மாசம் நான் வளர வளர உனக்கு துன்பத்தை தானே அதிகமாக கொடுத்துக் கொண்டே வந்தேன். இந்தா அதற்கு பரிகாரமாக நான் இடும் இந்த இரண்டாவது பிண்டம். ஏற்றுக்கொள் அம்மா.
3. பத்ப்யாம் ப்ரஜாயதே புத்ரோ ஜநந்யா: பரிவேதநம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
அம்மா, நான் அளித்த வேதனையில் நீ பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்துக்கொண்ட தாங்கமுடியாத துன்பம் நான் உன்னை வயிற்ருக்குள் இருந்தபோது உதைத்தது தானே. அதற்காக ப்ராயச்தித்தமாக இந்த 3வது ஸ்பெஷல் பிண்டம் உனக்கு. என் தாயே.
4. ஸம்பூர்ணே தசமே மாஸி சாத்யந்தம் மாத்ருபீடநம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
''அம்மா, இந்த 4 வது பிண்டம் உனது பூரண கர்ப காலத்தில் நீ என்னால் பட்ட வேதனைக்காக -- ஒரு பரிசு -- என்றே ஏற்றுக்கொள். என்னைப் பொருத்தவரை எனது பிராயச்சித்தம் என்று நான் இடுகிறேன்.
5. சைதில்யே ப்ரஸவே ப்ராப்தே மாத விந்ததி துஷ்க்ருதம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் |
''ஏண்டி மூச்சு விடறது கஷ்டமாக இருக்கா. கொஞ்ச காலம் தான் பொறுத்துக்கோ'' .என்று உன் உறவுகள், நட்புகள் கேட்குமே. அவ்வாறே மனமுவந்து நான் விளைத்த துன்பத்தை, வேதனையை நீ தாங்கினாயே. அதற்கு பரிகாரம் தான் இப்போது என் கையில் நான் தாங்கும் இந்த ஐந்தாவது பிண்டம். ஏற்றுக்கொள் என் அருமைத் தாயே.''
6. ' பிபேச்ச கடுத்ரவ்யாணி க்வாதாநி விவிதா நி |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
''குழந்தை வயித்திலே இருக்கும்போது இதெல்லாம் எனக்கு வேண்டாம். அப்புறமா சாப்பிடறேன்'' என்று உனக்கு பிடித்ததை எல்லாம் கூட வேண்டாமே என்று உதறினாயே. எனக்காகவே பத்தியம் இருந்தாயல்லவா. நான் நோயற்று வளர, வாழ எத்தனை தியாகம் செய்தாய். நான் உனக்கு செய்த பாவத்திற்கு தான் இந்த ஆறாவது பிண்டம். அம்மா இதற்கு மேல் என்னால் என்ன செய்ய முடியும் சொல்?'
7. அக்நிநா சோஷயேத்தேஹம் தரிராத்ரோ போஷணேந |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
''நான் குவா குவா என்று பேசி பிறந்து சில நாட்கள் தான் ஆகிறது. அப்போது நீ பசியை அடக்கி வெறும் வயிற்றோடு எத்தனை நாள் சரியான ஆகாரம் இன்றி தூக்கமின்றி வாடினாய். எனக்கு மட்டும் பால் நேரம் தவறாமல் கிடைத்ததே. அந்த துன்பத்தை நான் உனக்கு கொடுத்ததற்கு பரிகாரம் தான் இந்த 7வது பிண்டம்..\
8. ராத்ரௌ மூத்ரபுரீஷாப்யாம் க்லிந்ந: ஸ்யாந்மாத்ரு கர்பட |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது. கண்ணில் நீரும் சுரக்கிறது. எத்தனை இரவுகள் அசந்து தூங்கும் உன் புடவையை ஈரம் பண்ணியிருக்கிறேன். படவா என்று செல்லமாக தானே சிரித்துக்கொண்டே வேறு துணி எனக்கும் மாற்றினாய். இதற்கு நான் உனக்கு இடும் கைம்மாறு தான் இந்த 8 வது பிண்டம். இதையாவது ஈரமில்லாமல் தருகிறேனே. \
9. ''தயா விஹ்வலே புத்ரே மாதா ஹ்யந்தம் ப்ரயச்ச தி |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
''நான் சுகவாசி. எனக்கு எப்போது தாகம், பசி, தூக்கம், எதுவுமே தெரியாது.நீ தான் இருந்தாயே, பார்த்து பார்த்து அவ்வப்போது, எனக்காக நீ இதெல்லாம் செய்தாயே. இந்த பெரிய மனது பண்ணி என்னை வளர்த்த உனக்கு நான் எவ்வளவு துன்பம் தந்திருக்கிறேன். அதற்காக பிராயச் சித்தமாக இந்த 9வது பிண்டம்.
.
10. திவாராத்ரௌ ஸதா மாதா ததாதி நிர்பரம் ஸ்தநம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
''ஒரு சின்ன செல்ல தட்டு என் மொட்டை மண்டையில். ''கடிக்காதேடா..'' . நான் பால் மட்டுமா உறிஞ்சினேன். என் சிறு பல்லால் உன்னை கடித்தேனே. வலித்ததல்லவா உனக்கு. இந்தா அதற்காக ப்ளீஸ் இந்த பிண்டத்தை ஏற்றுக்கொள் அம்மா
11. மாகே மாஸி நிதாகே சசிரேத்யந்த து கிதா |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
''வெளியே பனி, குழந்தைக்கு ஆகாது. இந்த விசிறியை எடு. குழந்தைக்கு உள்ளே வியர்க்கும். வாடைக்காத்து. ஜன்னலை மூடு. எனக்கு காத்து வேண்டாம். குழந்தையைப் போர்த்தவேண்டும். கம்பளி கொண்டுவா. குழந்தைக்கு குளிருமே.'' காலத்திற்கேற்றவாறு என்னை கருத்தில் கொண்டு காத்த என் தாயே, நான் பிரதியுபகாரமாக கொடுப்பதெல்லாம் இந்த சிறு பிண்டம், 11வதாக எடுத்துக்கொள்.'
12. புத்ரே வ்யாதி ஸமாயுக்தே மாதா ஹா க்ரந்த காரிணி
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
எத்தனை இரவுகள், எத்தனை மன வியாகூலம். குழந்தை நெற்றி எல்லாம் சுடறதே, சுவாசம் கஷ்டமாயிருக்கே. சளி உபாதையாக இருக்கிறதே என்று வருந்தி, நாமக் கட்டி, மஞ்சள், விபூதி, பத்து எல்லாம் தடவி மடியில் போட்டு ஆட்டி, தட்டி, என்னை வளர்த்தாயே, கண்விழித்து உன் உடல் . அதற்காகத்தான் இந்த 12வது பிண்டம் தருகிறேன்.
13. யமத்வாரே மஹாகோரே மாதா சோசதி ஸந்ததம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
நான் இந்த பூலோகத்தில் இப்போது கார், பங்களா வசதிகளோடு கை நிறைய காசோடு . ஆனால் இதெல்லாம் அனுபவிக்காமல் நீ யமலோகம் நடந்து சென்று கொண்டிருக்கிறாயே. என் கார் அங்கு வராதே. வழியெல்லாம் எத்தனை இடையூறு. அவை எதுவுமே உனக்கு துன்பம் தராமல் இருக்க நான் தர முடிந்தது இந்த 13வது பிண்டம் தான் அம்மா.
14. யாவத்புத்ரோ பவதி தாவந்மாதுச்ச சோசநம் |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
நான் இப்போது, பெரிய டாக்டர், எஞ்சினீயர், வக்கீல், ஜட்ஜ், ஹெட்மாஸ்டர், கம்ப்யூடர் ஸ்பெஷலிஸ்ட் -- நீ இல்லாவிட்டால் நானே எது.? ஏது? ஆதார காரணமே, என் தாயே, இந்த 14வது பிண்டம் தான் அதற்கு பரியுபகாரமாக உனக்கு என்னால் தர முடிந்தது.
15. ஸ்வல்ப ஆஹாரஸ்ய கரணீ யாவத் புத்ரச்ச பாலக: |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
திருப்பி திருப்பி சொல்கிறேனே. நான் வளரத்தானே நீ உன்னை வருத்திக்கொண்டாய். நீ வேண்டியதை திரஸ்கரித்தாய். நான் புத்தகத்தில் தான் ''தன்னலமற்ற''
தியாகம் என்று படிக்கிறேன். நீ அதை பிரத்யக்ஷமாக புரிந்து அனுபவித்தவள். எனக்காக நீ கிடந்த பட்டினி, பத்தியம் எல்லாவற்றிற்கும் உனக்கு நான் தரும் பிரதிஉபகாரம் இந்த 15வது பிண்டம் ஒன்றே.
16. காத்ரபங்கா பவேந்மாதா ம்ருத்யு ஏவ ஸம்சய |
தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
நான் சுய கார்யப் புலி. சுயநல விஷமி. உன்னில் நான் உருவாகி, கருவாகி, சிறுவனாகி, பெரியவனாகி, இப்போது உன் மரண வேதனையை சற்றே உணர்ந்தவனாக கண்ணில் நீரோடு தரும் இந்த 16வது கடைசி கடைசி பிண்டத்தை ஏற்றுக்கொள் என் தாயே. தெய்வமே. என்னை மன்னித்து ஆசிர்வதி.

(

4 comments:

Raj said...

very nice too see. Not sure if it is auspicious to chant this shodasi but i am sure it is auspicious to understand the meaning of the shlokas and the sacrificies made by our mothers. Thanks for the meaning. And once again, it is proved the Hinduism is not a religion but a way of life.

Thank you verymuch sir!!

viswanathang@gmail.com said...

Thanks for making me understand the meaning of mathru shodasi
It is very moving and makes me feel for my mother
I am curious about other (64-16) slokas we chant when we offer other pindams

BHANUSIVA said...

Sir, Very useful & eye opening. I did Gaya sradham few years back with my wife & some friends with families. We were in uncontrollable tears when the Ganapadigal explained the sequence and recited mantras. Today being Mothersday 13.05.2018, I remembered that event & wished to share with others in WA. I saw your blog when I googled. Took the meanings of the 16 Mantras & shared. I feel those who go through that will get atleast 50% punyam. My heartfelt Thanks to you sir. Will go through your blogs. SIVARAJAN, chennai.

Anonymous said...

அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை